காமத்தின் உச்சம்..! ஊரடங்கில் பள்ளி விடுதியில் தங்கிய 9 வயது மாணவன்..! பாலியல் துன்புறுத்தல் கொடுத்த விடுதி காப்பாளர்..!

ஊரடங்கு சமயத்தில் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 9 வயது சிறுவனை விடுதி காப்பாளர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் தேராடூன் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்துவந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். சிலர் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலையில் பள்ளியில் உள்ள விடுதியிலையே தங்கியுள்ளனர்.
அந்த வகையில், அந்த பள்ளியில் படித்துவந்த உதிர்ப்பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் ஊருக்கு திரும்ப முடியாதநிலையில் விடுதியிலையே தங்கியுள்ளான். சிறுவனின் பெற்றோராலும் பள்ளிக்கு வந்து சிறுவனை அழைத்துச்செல்ல முடியவில்லை.
தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், தங்கள் மகனை அழைத்துச்செல்ல அவனது பெற்றோர் விடுதிக்கு வந்துள்ளனர். அப்போது விடுதி காப்பாளர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அவரது அறையை சுத்தம் செய்ய தன்னை பயன்படுத்திக்கொண்டதாவும் பெற்றோரிடம் கூறியுள்ளான்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விடுதி காப்பாளரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.