42 வயதில் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த தமிழ் சீரியல் நடிகை; குவியும் வாழ்த்துக்கள்.!
மாடுகளையும் விட்டு வைக்காத காமக் கொடூரன்: கையும் களவுமாக பொறி வைத்து பிடித்த நண்பன்..!
![He isolated the cows and sexually assaulted them continuously](https://cdn.tamilspark.com/large/large_untitled-51702.jpg)
கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (34). இவர் மாடுகளை பாலியல் சீண்டல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான மஞ்சுநாத்திடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இவர் தொடர்ந்து மாடுகளை பாலியல் வன்புணர்வு செய்து வந்ததும், இதற்காக இவரது கிராமத்தில் இருந்து பெங்களூரு பல்கலைக்கழகத்திற்கு சென்று வந்ததும் தெரிய வந்தது.
புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளை தனிமைப்படுத்தி இவர் தொடர்ந்து அவற்றை பாலியல் வன்புணர்வு செய்துவந்துள்ளார். இவரது இத்தகைய நடத்தையால் மஞ்சுநாத்தின் குடும்பமே அவரைக் கை விட்டுள்ளது. இந்த நிலையில், எந்த வேலைக்கும் செல்லாத மஞ்சுநாத் பெங்களூருவில் சசிகுமார் என்கிற நண்பருடன் தங்கி இருந்துள்ளார்.
அவருடன் தங்கி இருந்த போதே, சசிகுமார் வீட்டில் வளர்த்த மாடுகளின் வால்களை வெட்டிக் கொடுமைப்படுத்தியதுடன் அவற்றை மஞ்சுநாத் பாலியல் வன்புணர்வும் செய்துள்ளார். இதற்கிடையே அவரை கையும் களவுமாகப் பிடித்த சசிகுமார், மஞ்சுநாத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.