முதலிரவில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த மணமகன்.! பரிதாப மரணம்.!

முதலிரவில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த மணமகன்.! பரிதாப மரணம்.!



groom died in first night

ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டத்தைச் சேர்ந்தவர் துளசி பிரசாத். இவர் இவருடன் பணியாற்றும் சிரிஷா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினரின் சம்மதத்தோடு செப்டம்பர் 12-ம் தேதி இவர்களது திருமணம் நடந்துள்ளது.

இதனையடுத்து செப்டம்பர் 12-ம் தேதி குடும்பத்தினர் அந்த தம்பதிக்கு முதலிரவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வைத்துள்ளனர். ஆனால் முதலிரவு அறையில் எதிர்பாராதவிதமாக துளசி பிரசாத் சுயநினைவை இழந்து கீழே விழுந்துள்ளார்.

இதனால் பதறிப்போன சிரிஷா, குடும்பத்தினரை உதவிக்கு அழைத்து  அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.ஆனால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.