சாதி மறுப்பு காதல் செய்த 17 வயது பெண்... பெற்றோர் செய்த கொடூரம்... விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை.!



father-and-his-relatives-killed-a-17-year-old-girl-for

கர்நாடக மாநிலத்தில் வேற்று சாதி  பையனை காதலித்ததால் மகளை ஆணவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண்ணின்  தந்தை சகோதரர் மற்றும் உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம்   குப்பி  தாலுகாவை சேர்ந்தவர் பரசுராம் இவரது மகள் நேத்ராவதி வயது 17. நேத்ராவதி சிராவில் உள்ள கல்லூரியில் பியுசி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அதே கல்லூரியில் பி காம் இறுதி ஆண்டு படித்து வந்த  குமார் என்ற மாணவருக்கும் நேத்ராவதிக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் குமார் வேறு ஜாதி என்பதால் நேத்ராவதியின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

India

தங்கள் பெற்றோர்கள் தங்களை பிரித்து விடுவார்கள் என்று எண்ணிய காதல் ஜோடி கடந்த எட்டாம் தேதி வீட்டை விட்டு வெளியேறியது. இதனைத் தொடர்ந்து இரு குடும்பத்தாரும்  தங்கள் பிள்ளைகளை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். மேலும் நேத்ராவதியின் பெற்றோர்  குமாரை அழைத்து மிரட்டி இருக்கின்றனர். இந்நிலையில் நேத்ராவதி திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக  நேத்ராவதியின் தந்தை பரசுராம் கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். இந்த தற்கொலை பற்றி காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்காமல் அவசர அவசரமாக நேத்ராவதியின் உடலை எரித்திருக்கின்றனர். இதனால் சந்தேகம் அடைந்த ஊர் மக்கள் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பரசுராம் அவரது மகளை ஆணவக் கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. தனது மகளின் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு  அவர் விஷம் குடித்து தற்கொலை செய்ததாக நாடகமாடி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த கொலையில் தொடர்புடைய பரசுராம் அவரது மகன் சிவராம் மற்றும் பரசுராமின் சகோதரர்  துக்காராம் ஆகியோரை கொலை குற்றத்திற்காக கைது செய்தது காவல்துறை.