அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு!!

அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு!!



erthquake in andhaman nicobar


அந்தமானின் நிகோபார் தீவுகளில் இன்று லேசான நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இன்று காலை 5:30 மணியளவில், அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அங்கு ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 -ஆக பதிவானது. அந்த நிலநடுக்கத்தால், பல வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு அப்பகுதி மக்களால் அதனை உணர முடிந்துள்ளது.

அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.