ஸ்ரீ ராமனை ஓடவிட்ட இராவணன்.. வைரலாகும் வீடியோ., தலைதெறித்து ஓடிய சாமியார்.!

ஸ்ரீ ராமனை ஓடவிட்ட இராவணன்.. வைரலாகும் வீடியோ., தலைதெறித்து ஓடிய சாமியார்.!



Diwali Festival Lord

இந்தியாவில் உள்ள மக்களால் வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்படும் திருவிழாக்களில் தீப ஒளித் திருநாள் மிகப்பிரம்மாண்டமானது ஆகும். அந்தந்த ஊர்களின் மரபு வழி கதைகளின் படி தீப ஒளிக்கு என வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. 

அவை முந்தைய காலங்களில் நடந்து, உலகத்தின் அழிவுக்கு பின்னர் எஞ்சிய மக்களால் வழிவழியாக சொல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வடமாநிலங்களில் ஸ்ரீ இராமர் இலங்கை அரசன் இலங்கேஸ்வரனை வெற்றிகொண்டு அயோத்தி திரும்பிய நாள் தீப ஒளித்திருநாளாக சிறப்பிக்கப்படும்.

இந்நிலையில், அதனைப்போன்ற ஒரு திருவிழாவில், பட்டாசுகள் கட்டி வைக்கப்பட்ட இராவணன் சிலை மீது இராமன் வேடத்தில் வந்தவர் தீயினால் உள்ள அம்பை வெளிப்படுத்த, அம்பு பட்டு பட்டாசுகள் வெடிக்க தொடங்கி இராமனை ஓடவிட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.