வரம்பு மீற திருமண ஊர்வலம் நடத்திய குடும்பத்தினர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!
தற்போதைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முன்பாக திருமண வரவேற்பு, மணமக்கள் ஊர்வலம், ப்ரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகிறது. அதில் மணமக்கள் ஊர்வலம் என்ற பெயரில் பட்டாசு வெடித்தும், டிஜே இசையுடன் சாலையை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

அந்த வகையில் உத்தர பிரதேசம் மாநிலம் பாரபங்கியில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் திருமண ஊர்வலம் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் போக்குவரத்தை சரி செய்வதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து திருமண வீட்டார் மீது ஐபிசி-யின் பிரிவுகள் 268, 188, 341 மற்றும் 7சிஎல்ஏ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த பிரிவுகளில் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டவர்கள் ஜாமீன் இல்லாமல் ஒரு நாள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது