தாயை சமாதானப்படுத்த குழந்தை கடத்தல்: 23 வயது இளம்பெண்ணின் விபரீத செயல்.!

தாயை சமாதானப்படுத்த குழந்தை கடத்தல்: 23 வயது இளம்பெண்ணின் விபரீத செயல்.!



Delhi Women Steals Baby From Hospital 

 

டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், சமய்பூர் பகுதியை சேர்ந்த 19 வயது பெண்மணி பிரசவத்திற்காக அனுமதியாகி இருக்கிறார். அவருக்கு குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. 

இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் பிரசவ வார்டில் பெண்மணி ஓய்வெடுத்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, 23 வயதுடைய பெண்மணி குழந்தையை திருடிக்கொண்டு மயமாகி இருக்கிறார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் குழந்தையை கடத்திச்சென்ற 23 வயது இளம்பெண்ணை கைது செய்து குழந்தையை மீட்டனர். 

விசாரணையில், 23 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும் குழந்தை இல்லை. இதனால் அவரின் தாயார் வருத்தத்திலேயே இருந்துள்ளார். 

அவரை சமாதானம் செய்ய குழந்தையை கடத்தி செல்லலாம் என முடிவெடுத்த பெண்மணி, அரசு மருத்துவமனையில் புகுந்து பிறந்த பச்சிளம் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. 

குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், 23 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டார்.