அச்சச்சோ.. டெல்லியில் மீண்டும் நில அதிர்வு.. ரோட்டில் தஞ்சம் புகுந்து பீதியில் பொதுமக்கள்..!

அச்சச்சோ.. டெல்லியில் மீண்டும் நில அதிர்வு.. ரோட்டில் தஞ்சம் புகுந்து பீதியில் பொதுமக்கள்..!


Delhi state earthquake

நேற்று இரவு பாகிஸ்தான் நாட்டிலுள்ள வடமேற்கு பகுதியான கைபர் பக்துன்க்வா(Khyber Pakhtunkhwa province) மாகாணத்தில் இன்று அதிபயங்கர நிலநடுக்கமானது ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு இந்தியாவின் வடமாநிலம், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் உணரப்பட்டன. இதன்காரணமாக மக்கள் பலரும் ரோட்டில் தஞ்சம்புகுந்தனர். அத்துடன் நடிகை குஷ்புவும் இதுகுறித்து தனது டுவீட்டில் தெரிவித்திருந்தார். 

India

இந்த நிலையில் டெல்லியில் 2.7 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ள சம்பவம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு டெல்லியை மையமாக வைத்து 2.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.