நள்ளிரவில் தூக்கத்தை கெடுத்த DJ பாடல் கச்சேரி.. தட்டிக்கேட்ட 8 மாத கர்ப்பிணி மீது துப்பாக்கிசூடு; மருத்துவமனையில் ஊசலாடும் உயிர்.!

நள்ளிரவில் தூக்கத்தை கெடுத்த DJ பாடல் கச்சேரி.. தட்டிக்கேட்ட 8 மாத கர்ப்பிணி மீது துப்பாக்கிசூடு; மருத்துவமனையில் ஊசலாடும் உயிர்.!



Delhi Pregnant Women Shot by Neighbor He Play DJ Mid Night

 

வீட்டின் மொட்டை மாடியில் நள்ளிரவு நேரத்தில் அக்கம் பக்கத்தினரின் தூக்கத்தை கெடுத்தவரை தட்டிக்கேட்ட கர்ப்பிணி பெண் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி மாநிலத்தில் உள்ள சிராஸ்பூர், சமய்ப்பூர் பகுதியில் வசித்து வரும் பெண்மணி ரஞ்சு (வயது 30). இவர் 8 மாத கர்ப்பமாக இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவரது வீட்டின் மொட்டை மாடியில் அதிக சப்தத்துடன் பாடல் இசைக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12:15 மணியளவில் உறக்கத்தில் இருந்து விழித்த ரஞ்சு, தனது அக்கா மகளுடன் மொட்டை மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஹரிஷ் என்பவர் பாடல் கேட்டதை கவனித்து இருக்கிறார்.

ஹரிஷை அழைத்த ரஞ்சு பாடல் சத்தத்தை குறைத்து வைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், ஹரிஷ் அதனை ஏற்க மறுத்ததால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

delhi

இந்த வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த ஹரிஷ், 8 மாத கர்ப்பிணியான ரஞ்சுவின் மீது துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ரஞ்சுவை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஹரிஷ் மற்றும் அவரின் உறவினரை கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரஞ்சுவுக்கு குழந்தை இறந்துவிட்டது. தொடர்ந்து அவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.