ரயிலில் எல்லை மீறிய காதல் ஜோடியினர் - மர்ம நபரால் நிகழ்ந்த விபரீதம்!

ரயிலில் எல்லை மீறிய காதல் ஜோடியினர் - மர்ம நபரால் நிகழ்ந்த விபரீதம்!


delhi-lovers-video

இளம் காதல் ஜோடிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் போது ஆபாசமாக நடந்து கொண்டதை வீடியோ எடுத்து வெளியிட்ட மர்ம நபர்.

இன்று பெரும்பாலான காதல் ஜோடிகள் பொது இடம் என்று கூட பார்க்காமல் மிகவும் நெருக்கமாக இருந்து வருகின்றனர். மற்றவர்கள் இதனை பார்க்கிறார்கள் என்று கூட இல்லாமல் பொது இடத்தில் மிகவும் நெருக்கமாக இருக்கும் நிகழ்வு ஒரு சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

இதேபோல் டெல்லியில் இளம் காதல் ஜோடிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது எல்லை மீறி இருவர்களும் ஆபாசமாக நடந்து கொண்டுள்ளனர். இதனை பார்த்த ஒரு மர்ம நபர் அதனை ஒரு வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

மேலும் அந்த மர்ம நபர் வீடியோ எடுத்த சில நேரத்திலேயே அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இணையத்தில் வெளியிட்ட சில மணித்துளிகளில் அதிகப்படியான மக்கள் இதனை பார்த்துள்ளனர்.இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் ஜோடியினர் மர்ம நபர் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸ் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.