அடப்பாவி.. தெருநாயை கதறவிட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.. போலீசாரை பதறவைத்த வீடியோ..!!

அடப்பாவி.. தெருநாயை கதறவிட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.. போலீசாரை பதறவைத்த வீடியோ..!!



delhi-indrapuri-man-raped-a-street-dog

சமீப காலமாகவே போதை ஆசாமிகள் செய்யும் அட்டகாசங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் டெல்லியில் போதை ஆசாமி ஒருவர் நாயை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லி ஹரிநகரில் உள்ள பூங்காவில் ஒருவர் நாயை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி பலரையும் அதிரவைத்தது. பூங்காவில் நடந்த சம்பவத்தில் குற்றவாளி யார் என்பது இதுவரையிலும் தெரியவில்லை. எனினும் பலரும் அந்த வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில், தற்போது மீண்டுமொரு சம்பவம் டெல்லியின் மற்றொரு பகுதியில் நடந்துள்ளது. டெல்லியில் இந்திரபுரி நகர், ஜே ஜே காலனியில் ராஜேஷ் என்பவர் காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், 'கடந்த 28ஆம் தேதியன்று இரவு திருமண நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது, பி பிளாக் பகுதியில் நாய் ஒன்று கதற ஊளையிடும் சத்தம் கேட்டது. 

அந்த சத்தம் சற்று வித்தியாசமாகவும் தெரிந்தது.  அதனால் சந்தேகமடைந்த நான் ஓடிப்போய் பார்த்தபோது என் வீட்டிற்கு அருகே வசிக்கும் சதீஷ் என்பவர் அந்த நாயை பாலியல் வன்கொடுமை செய்துக்கொண்டிருந்தார். அந்த சதீஷ் மதுபோதைக்கு அடிமையான ஒருவர்' என்று குறிப்பிட்டு இருந்தார். 

அத்துடன் மது போதையில் தெருநாயை பாலியல் வன்கொடுமை செய்ததை தனது செல்போனில் வீடியோவாகவும் எடுத்துள்ளதாக ராஜேஷ் ஆதாரத்துடன் நிரூபித்தார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட சதீஷை கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.