செங்கலை எடுத்து மருமகளின் மண்டையை பிளந்த மாமனார்.. நடுரோட்டில் பரபரப்பு சம்பவம்.!

செங்கலை எடுத்து மருமகளின் மண்டையை பிளந்த மாமனார்.. நடுரோட்டில் பரபரப்பு சம்பவம்.!



Daughter in law attaked by father-in-law

குடும்ப சண்டையில் ஆத்திரப்பட்ட மாமனார், மருமகளின் மண்டையை செங்கலால் அடித்து உதைத்த சம்பவம் நடந்துள்ளது.

டெல்லி மாநிலத்தில் உள்ள பிரேம் நகரில் பகுதியில் வசித்து வரும் மருமகள் - மாமனார் இடையே தகராறு நடந்துள்ளது. சம்பவத்தன்று நடைபெற்ற பிரச்சனையில் மாமனார் உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்றுள்ளார். 

அப்போது, தனது கைகளில் செங்கலை எடுத்து வந்த மாமனார், வீதியில் மருமகளிடம் வைத்து வாக்குவாதம் செய்கிறார். பின்னர், அவரின் தலையில் பலமாக அடிக்கிறார். 

ஒருமுறை மட்டுமல்லாது இரண்டு முதல் மூன்று முறை மருமகளின் தலையில் செங்கலை வைத்து பலமாக அடிக்க, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விஷயம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகவே, காவல் துறையினர் சப்பவும் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.