பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவரது மர்மஉறுப்பில் இரும்பு கம்பியை சொருகிய கொடூரர்கள், வெளியான அதிர வைக்கும் காரணம்.!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அவரது மர்மஉறுப்பில் இரும்பு கம்பியை சொருகிய கொடூரர்கள், வெளியான அதிர வைக்கும் காரணம்.!



cruel people sexually abused the girl

மேற்கு வங்கம் மாநிலத்தில் ஒருவர் மீது கொண்ட பகையை தீர்ப்பதற்காக அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து அவரது மர்ம உறுப்பில் இரும்பு கம்பியை குத்திய கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ஜல்பய்குரி மாவட்டத்தில் பழங்குடி கிராமத்தில் கணவன் மீதான தனிப்பட்ட பகையை தீர்ப்பதற்காக அவனை பழி வாங்க அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்யய  ரத்ன முண்டா மற்றும் பரிமல் ராய் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். 

இதனிடையே சம்பவதன்று அவர்கள்  இருவரையும் மது அருந்துவதற்காக வீட்டுக்கு வருமாறு அந்த பெண்ணின் கணவன் அழைத்துள்ளார். ஆனால் நெடுநேரம் ஆகியும் கணவன் வரவில்லை இந்நிலையில் இருவரும் வீட்டுக்கு வந்துவிட்டனர்.

 கணவன் இரவு 10 மணி வரை வீடு வராததால் அதிர்ச்சி அடைந்த பெண் இருவரையும் அங்கேயே இருக்கும்படி கூறிவிட்டு கணவரை தேடி சென்றார். இதுதான் சரியான சந்தர்ப்பம் என நினைத்த இருவரும் அந்த பெண்ணை பின் தொடர்ந்தனர். 

அப்போது ஒரு குளத்தின் அருகே யாரும் இல்லாதஇடத்தில் அந்த பெண்ணை மடக்கி அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர்

அதன்பிறகும் வெறி அடங்காத அந்த கொடூரர்கள் அந்த பெண்ணின் மர்ம உறுப்பில் இரும்பு கம்பியை குத்தி வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இந்நிலையில் வலியால் துடித்த அந்த பெண்ணை அந்த வழியாக சென்ற ரிக்ஷா இழுக்கும் நபர் கண்டு  மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். 

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.