இவைதான் கொரோனா வைரஸின் 6 புதிய அறிகுறிகள்..! மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
இவைதான் கொரோனா வைரஸின் 6 புதிய அறிகுறிகள்..! மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் அறிகுறியாக ஆறு அறிகுறிகளை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற மூன்று அறிகுறிகள் மட்டுமே இதற்கு முன்னதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது புதிய ஆறு அறிகுறிகளை மத்திய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் புதிதாக பட்டியலிட்டுள்ளது.
அதன்படி, தசைவலி, தலைவலி, தொண்டை கரகரப்பு, குளிர்க்காய்ச்சல், நடுக்கத்துடன் கூடிய குளிர்க்காய்ச்சல் மற்றும் நுகரும் தன்மை அல்லது சுவை உணர்வு திடீரென குறைந்து போதல் ஆகியவை புதிய கொரோனா அறிகுறிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்கள் சிவந்துபோவதையும் கொரோனாவின் ஒரு அறிகுறியாக கண் மருத்துவர்கள் கருதிவருகின்றனர். சிவந்த கண்களுடன் சிகிச்சைக்கு வருபவர்களை கொரோனா தொற்று அபாயம் உடையவர்களாகவே கருதி எச்சரிக்கையுடன் அணுகுவதாக கண் மருத்துவர்கள் கூறுகின்றனர்.