இந்தியாவில் 6 மாநிலங்களில் தீவிரமாக பரவும் கொரோனா பாதிப்பு.! தமிழகத்திலுமா.? மத்திய அரசு அறிவிப்பு.!

இந்தியாவில் 6 மாநிலங்களில் தீவிரமாக பரவும் கொரோனா பாதிப்பு.! தமிழகத்திலுமா.? மத்திய அரசு அறிவிப்பு.!



corona-increased-in-tamilnadu-T2RCXZ

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வந்தது.

இந்தநிலையில் தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

corona

இந்தநிலையில் இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்த மொத்த எண்ணிக்கை 1,10,96,731 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,57,051 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் மொத்த பாதிப்பில் தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் மட்டும் 86.37% கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுமாறு இந்த 6 மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.