இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 1,092 பேர் பலி! பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 1,092 பேர் பலி! பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?



corona increased in india

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 27.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  27,67,274 ஆக அதிகரித்துள்ளது. 

corona

ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 1,092 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 52,889 ஆக அதிகரித்துள்ளது. தற்போதுவரை கொரோனா தொற்று பாதிப்புடன்  6,76,514 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டும் 8,01,518 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.