பாலியல் வன்கொடுமையை என்ஜாய் பண்ணுங்க...! சட்டசபையில் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு.!



 congress mla speech in assembly

கர்நாடக சட்டசபையில் நேற்று பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, சமீபத்தில் மாநிலத்தில் பெய்த மழை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் குறித்து சட்டசபையில் கூடுதல் நேரம் விவாதிக்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டனர். 

இதில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர் விமர்சனங்களையும், கோரிக்கைகளையும் முன்வைத்து வந்தது. அப்போது பேசிய சபாநாயகர் அனைத்திற்கும் ஆம், ஆம் என கூறும் சூழ்நிலையிலும் நான் உள்ளேன். நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சியை விட்டுவிட்டு முறையான நடவடிக்கைகளை நான் எடுக்க வேண்டும் எம கூறினார்.

அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான ரமேஷ் குமார், "பாலியல் வன்கொடுமையை எதிர்க்கொள்ளும்போது அதை தடுக்க முடியாவிட்டால் அதை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்கிற பழமொழி ஒன்று உள்ளது. இதே நிலையில்தான் நான் தற்போது நீங்கள் உள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏவின் பேச்சும், பாஜக சபாநயகரின் வரவேற்பும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து எம்.எல்.ஏ ரமேஷ் குமார் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.