கபடி விளையாடிய போது சுருண்டு விழுந்த கல்லூரி மாணவன் உயிரிழப்பு.! மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி காரணம்! சோக சம்பவம்!!

கபடி விளையாடிய போது சுருண்டு விழுந்த கல்லூரி மாணவன் உயிரிழப்பு.! மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி காரணம்! சோக சம்பவம்!!



college-student-dead-by-heart-attack-while-playing-kapa

கர்நாடகாவில் கபடி விளையாடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் மடகசிரா பகுதியைச் சேர்ந்தவர் தனுஜ் குமார் நாயக். 19 வயது நிறைந்த இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.பார்மசி படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் மும்முரமாக கபடி விளையாடி கொண்டு இருந்துள்ளார்.

அப்பொழுது திடீரென அவர் மயங்கி அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனே அவரை தூக்கி சென்று அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது மருத்துவர்களால் கண்டறியப்பட்ட நிலையில் அவர் மேற் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

கோமாவிற்கு சென்ற நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சை பலனின்றி தனுஷ் நாயக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கபடி விளையாடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.