6 ஆண்டு காலமாக குழந்தை இல்லை... ஆத்திரத்தில் மனைவியின் அந்தரங்க உறுப்பை சிதைத்த கொடூர கணவன்..!

6 ஆண்டு காலமாக குழந்தை இல்லை... ஆத்திரத்தில் மனைவியின் அந்தரங்க உறுப்பை சிதைத்த கொடூர கணவன்..!



childless-for-6-years-the-cruel-husband-mutilated-his-w

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் ரவீந்திரன். இவர்க்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத காரணத்தால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விடுவார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தை இல்லாததை காரணம் காட்டி இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது ரவீந்திரன் தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ரவீந்திரனின் மனைவி கோபித்துக் கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் கடந்த 8 மாத காலமாக தனது தாய் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

Cruel husband

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரவீந்திரன் தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மேலும் ரவீந்திரன் தனது மனைவியுடன் இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்ள முயன்றுள்ளார். இதற்கு அவரது மனைவி மறுக்கவே ஆத்திரமடைந்த ரவீந்திரன் தனது மனைவியின் அந்தரங்க உறுப்பை பிளேடால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடி உள்ளார்.

இதனையடுத்து அவரது மனைவி கூச்சலிடவே அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ரவீந்திரனை தேடி வருகின்றனர்.