அப்படிப்போடு.. தனிநபர் டிஜிட்டல் தரவுகள் தவறாக உபயோகித்தால் ரூ.500 கோடி அபராதம் - மத்திய அரசு தடாலடி.!

அப்படிப்போடு.. தனிநபர் டிஜிட்டல் தரவுகள் தவறாக உபயோகித்தால் ரூ.500 கோடி அபராதம் - மத்திய அரசு தடாலடி.!



Central Govt Bill About Digital Documents

 

பழைய தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசினால் வாபஸ் பெறப்பட்டு, புதிய மின்னணு தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022 உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த மசோதாவில் தனிநபர்களின் மின்னணு தரவுகளை பாதுகாக்க புதிய சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவை சட்டரீதியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Central Govt

தனிநபரின் தரவுகளை சட்டவிரோத காரியங்களுக்கு பயன்படுத்தினால், குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் ரூ.500 கோடி வரை அபராதம் விதிக்கவும் வரைவு மசோதாவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2019ம் ஆண்டு வெளியான வரைவு மசோதாவில் ரூ.15 கோடியாக இருந்த அபராத தொகை ரூ.500 கோடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.