கட்டு கட்டாக சாலையில் கிடந்த பணம்... புதுச்சேரியில் பரபரப்பு...!!

கட்டு கட்டாக சாலையில் கிடந்த பணம்... புதுச்சேரியில் பரபரப்பு...!!



cash-lying-on-the-paved-road-puducherry-is-in-a-frenzy

புதுச்சேரி அண்ணாசாலை, செட்டிவீதி சந்திப்பில் நீண்ட நேரமாக ஒரு பை கிடந்தது. இதை பார்த்து அந்த வழியே சென்றவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே இதுகுறித்து பெரியகடை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பையை சோதனையிட்டனர் அப்போது அந்த பையில் கட்டு கட்டாக பணம் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பணத்தை காவல் நிலையம் எடுத்துச் சென்று, விடிய விடிய எண்ணியதில் ரூ.49 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.
 
காவல்துறையினர் அந்த பணத்தை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஒரு தரப்பினர் சாலையில் கிடந்தது அவர்களது பணம் என்று கூறி, திருப்பித் தர வேண்டும் என்று கேட்டனர்.

அவர்களிடம் மாவட்ட நிர்வாகத்தினர், அந்த பணத்திற்கான உரிய ஆவணத்தை காண்பிக்கும்படி கேட்டுள்ளனர். இந்நிலையில், அனாமத்தாக கேட்பாறின்றி ரூ.49 லட்சம் பணம் கீழே கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.