தறிகெட்ட கார்.. கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்து பயங்கர விபத்து.. பகீர் காட்சிகள்.!



car-accident-and-rescued-from-fire-officers

கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று நிலைதடுமாறி, கிணற்றுக்குள் தலைகீழாக கவிழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு, பூச்சிக்காடு பகுதியில் நேற்று மாலை அதிவேகமாக ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிய நிலையில், சாலையோரம் இருந்த கிணற்றின் சுவரை இடித்து தள்ளி தலைகீழாக உள்ளே கவிழ்ந்துள்ளது.

இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் உடனடியாக காருக்குள் இருந்த குழந்தை உள்ளிட்ட 4 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். 

KERALA

தொடர்ந்து காவல்துறையினர் இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில், காரில் திடீரென பிரேக் பிடிக்காததால் நிலைதடுமாறியதாகவும், இதன் காரணமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதி கிணற்றுக்குள் தலைகீழாக கவிழ்ந்தது தெரியவந்துள்ளது.

அத்துடன் கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றுக்குள் தலைகீழாக கவிழும் பதைபதைக்கும் காட்சிகள் தற்போது சிசிடிவி காட்சிகளின் மூலமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.