திருமணம் செய்து வைத்த புரோகிதருடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்.,அம்பலமான ரகசியத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்!!

திருமணம் செய்து வைத்த புரோகிதருடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்.,அம்பலமான ரகசியத்தால் ஆடிப்போன குடும்பத்தார்கள்!!



bride-elope-with-lover-after-marriage

மத்திய பிரதேசம் ஆஷாத் பகுதியில் வசித்து வருபவர் வினோத் மஹராஜ். இவர் மந்திரங்களை ஓதி திருமணம் செய்து வைக்கும் புரோகிதராக இருந்துள்ளார்.

இந்நிலையில் புரோகிதர் வினோத் 7ம்தேதி டோரி பாக்ரோடு என்ற கிராமத்தில் பெண் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் அதே பகுதியில் மற்றொரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க ஒப்பந்தமாகியிருந்தார். 

marriage

இந்நிலையில் முதலில் திருமணம் செய்து வைக்கபட்ட அந்த பெண்  மூன்றாவது நாள் தனது கணவர் வீட்டில் இருந்து தாய் வீட்டிற்கு வந்த நிலையில் மாயமானார். மேலும் திருமணத்தை நடத்தி வைப்பதாக பேசபட்டிருந்த புரோகிதரும் சொன்னபடி திருமணத்திற்கு வரவில்லை.

இந்நிலையில் தனது மகளையும் காணாத நிலையில், புரோகிதர் மாயமானதால் பெண்ணின் வீட்டார்கள் அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது புரோகிதர்  வினோத்திற்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் எனவும், சமீபத்தில் இவர் திருமணம் செய்து வைத்த தனது மகளுடன் ஏற்கனவே 2 ஆண்டுகளாக பழக்கம் உள்ளநிலையில், ஊரை விட்டு ஓடிவிட்டார் எனவும் தெரியவந்தது. மேலும் வினோத் மகராஜ் தனது காதலியுடன், குழந்தைகள் மற்றும் மனைவியையும் உடன் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

marriage

மேலும் அந்த  வீட்டை விட்டு ஓடி போகும் போது வீட்டில் இருந்த ரூ1.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ 30 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்து சென்றதும் தெரியவந்தது.தற்போது இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.