ஆணின் அந்தரங்க உறுப்பில் பிளாஸ்டிக்கை உருக்கி ஊற்றி ஆண்களே செய்த பயங்கரம்..!! துடிக்க துடிக்க அடித்ததில் இறந்துபோன பரிதாபம்..!!



Boy attacked by boys in Drug rehabilitation center

குஜராத் மாநிலத்தில் உள்ள மேசானா மாவட்டத்தைச் சார்ந்தவர் ஹர்திக் சுதார். இவர் படான் மாவட்டத்தில் உள்ள ஜியோனா போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். 

இந்த விஷயத்தை அறிந்த போதை மறுவாழ்வு மையத்தின் மேலாளர் கொடூரமாக அவரை தாக்கியுள்ளார். மேலும் ஏழு பேராக சேர்ந்து வாலிபரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு, பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாக அடித்த நிலையில், இரண்டு மணி நேரம் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இந்தியா

பின்னர் பிளாஸ்டிக் பைப்பை தீயில் உருக்கி, அதனை வாலிபரின் அந்தரங்க பகுதியில் ஊற்றி கொடுமை செய்துள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். அத்துடன் இது தொடர்பாக காவல்துறையினர் ஏழு பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலாளரை தேடி வருகின்றனர்.