#Breaking: அதிவேக விரைவு இரயில் தடம்புரண்டு பயங்கர விபத்து: பயணிகள் நிலை என்ன?.. மீட்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைவு..!

#Breaking: அதிவேக விரைவு இரயில் தடம்புரண்டு பயங்கர விபத்து: பயணிகள் நிலை என்ன?.. மீட்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைவு..!



bihar-train-accident-today-express-train-derailed

 

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து காமக்யா நோக்கி செல்லும், நார்த் ஈஸ்ட் (வடகிழக்கு) அதிவேக விரைவு ரயில் பீகார் மாநிலத்தில் விபத்துக்குள்ளாகி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள பக்சர்பூர் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரகுநாத்பூர் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்த தகவல் அறிந்த படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 

மேலும், பல பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரியவரும் நிலையில், உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதா? என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த சம்பவம் பயணிகள் இடையே மீண்டும் அச்சத்தை பதிவு செய்தது.