அதிவேக விரைவு இரயிலின் 21 பெட்டிகள் பீகாரில் தடம்புரண்டு விபத்து: 4 பேர் பலி, 50 பேர் படுகாயம்..!

அதிவேக விரைவு இரயிலின் 21 பெட்டிகள் பீகாரில் தடம்புரண்டு விபத்து: 4 பேர் பலி, 50 பேர் படுகாயம்..!



Bihar Northeast Superfast Express Train Derail 4 Died Several Injured

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து காமக்யா நோக்கி செல்லும், நார்த் ஈஸ்ட் (வடகிழக்கு) அதிவேக விரைவு ரயில் பீகார் மாநிலத்தில் பக்சர்பூர் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரகுநாத்பூர் பகுதியில் விபத்து நடந்துள்ளது. 

விபத்து குறித்த தகவல் அறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.  

இரயில் எண் 12506 காமக்யா நோக்கி பயணிக்கும் போது விபத்து நேர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 21 இரயில் பெட்டிகளும் மொத்தமாக தடம்புரண்டன.

4 பேர் இவ்விபத்தில் உயிரிழந்த நிலையில், பலரும் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.