பூசாரி ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டு கொடூர கொலை: காரணம் என்ன?. அதிரவைக்கும் சம்பவம்..!

பூசாரி ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டு கொடூர கொலை: காரணம் என்ன?. அதிரவைக்கும் சம்பவம்..!



Bihar men murder issue police investigation

பீகார் மாநிலத்தில் உள்ள கோபால்கஞ்ச் மாவட்டத்தை சார்ந்தவர் மனோஜ் குமார். இவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் பாஜக பிரமுகரின் சகோதரர் ஆவார்.

இந்நிலையில் கடந்த ஆறு நாட்களுக்கு முன்னதாக கடத்தப்பட்ட இவரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். இதனிடையே கடத்தப்பட்ட கோவில் பூசாரி கொடூரமாக கொலை செய்யப்பட்டவாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

பீகார் மாநிலம்

அவரது கண்கள், பிறப்புறுப்பு ஆகியவை துண்டிக்கப்பட்ட நிலையில், சடலம் மீட்கப்பட்டுள்ளதால் நரபலி ஏதேனும் கொடுக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.