மாமியாருடன் தனிமையில் உல்லாசம்: கையும் களவுமாக சிக்கிய கணவரை நொறுக்கியெடுத்த மனைவி.!

மாமியாருடன் தனிமையில் உல்லாசம்: கையும் களவுமாக சிக்கிய கணவரை நொறுக்கியெடுத்த மனைவி.!



Bihar Man Held by Villagers Illegal Affair With Mother In Law 

 

பீகார் மாநிலத்தில் உள்ள ஜமுய் பகுதியை சேர்ந்தவர் சுனில். இவருக்கு திருமணம் முடிந்து, மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கின்றனர். 

இந்நிலையில், சுனிலுக்கும் - அவரின் மாமியாருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது, பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இதனையடுத்து, இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சிலநேரம் சுனில் தனது மாமியாரின் வீட்டிற்கு நள்ளிரவு நேரங்களில் சென்றும் உல்லாசமாக இருந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவில் கள்ளக்காதல் ஜோடி தனிமையில் இருந்தபோது கையும் களவுமாக சிக்கிக்கொண்டது. இதனால் ஊர்கூடி சேர்ந்து சுனிலை மரத்தில் கட்டிவைத்தனர். 

தகவல் அறிந்து வந்த மனைவியும் தனது கணவரை சரமாரியாக தாக்கினார். இந்த விஷயம் தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. 

ஆனால், வீடியோ வெளியாகி வைரலானதை தொடர்ந்து, லட்சுமிபூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.