ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்மை கூறுபோட்டு ரூ.40 இலட்சம் கொள்ளை.. பகீர் சம்பவம்.!

ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்மை கூறுபோட்டு ரூ.40 இலட்சம் கொள்ளை.. பகீர் சம்பவம்.!


Assam Bongaigaon Area ATM Machine Rs 40 Lakh Robbery Done By Gas Welding cutter

ஏ.டி.எம் இயந்திரத்தை கேஸ் வெடிங் கட்டர் வைத்து அறுத்து ரூ.40 இலட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள போங்கைகான் பகுதியில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமான ஏ.டி.எம் இயந்திரம் உள்ளது. இந்த நிலையில், இந்த ஏ.டி.எம் மையத்தில் நேற்று கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. 

ஏ.டி.எம்மை கூறுபோட்டு பணத்தை திருட கேஸ் வெடிங் மெஷினை உபயோகம் செய்த கொள்ளை கும்பல், ஏ.டி.எம்மை அறுத்து ரூ.40 இலட்சம் பணத்தை திருடி சென்றுள்ளது. மேலும், சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமிரா வயரையும் அறுத்து வைத்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொள்ளை கும்பலுக்கு தனிப்படை அமைத்து வலைவீசப்பட்டுள்ளது.