5 வயது சிறுவன் கழுத்தறுத்துக்கொலை.. கயவனை தீயிட்டு எரித்து கொன்ற பொதுமக்கள்.. பரபரப்பு.!

5 வயது சிறுவன் கழுத்தறுத்துக்கொலை.. கயவனை தீயிட்டு எரித்து கொன்ற பொதுமக்கள்.. பரபரப்பு.!


Assam 5 Aged Minor Boy Killed Man Beat and Burned to Death by Villagers

சிறுவனை கழுத்தறுத்து கொலை செய்த கொடூரனை கிராமமே சேர்ந்து எரித்துக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகர் மாவட்டத்தில் 5 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவனை கொலை செய்ததாக, தேயிலைத்தோட்ட தொழிலாளர் உயிருடன் எரித்து கொலை செய்த பதைபதைப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அசாமில் இருக்கும் தோலாஜன் தேயிலைத்தோட்ட பகுதியில், சுனித் தாந்தி என்ற மனநிலைபாதிக்கப்பட்ட நபர் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டருகே உள்ள சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். 

Assam

அப்போது, திடீரென ஆவேசத்துடன் வந்த சுனித் தாந்தி, வஜ்ரா முரா என்ற சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனைக்கண்டு ஆவேசமடைந்த பொதுமக்கள், சுனித்தை துரத்தி பிடித்து உயிருடன் எரித்து கொலை செய்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சிறுவன் வஜ்ரா மற்றும் சுனித் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.