மீன் கடைக்குள் அதிவேகத்தில் புகுந்த சொகுசு கார்.. கூலித்தொழிலாளி உடல் நசுங்கி பரிதாப மரணம்.!

மீன் கடைக்குள் அதிவேகத்தில் புகுந்த சொகுசு கார்.. கூலித்தொழிலாளி உடல் நசுங்கி பரிதாப மரணம்.!



asam-boy-dead-by-kottayam-car-accident

சொகுசு கார் மீன் கடைக்குள் புகுந்ததில், அசாம் மாநில தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம், சிங்கவனம் பகுதியில் இரு நாட்களுக்கு முன்னதாக சாலையோரம் வழக்கம்போல மீன்கடை ஒன்று நடந்துள்ளது. அப்போது அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று கடைக்குள் புகுந்த நிலையில், கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அசாம் மாநில தொழிலாளி மீது ஏறியதால் அவர்,சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது அந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சிசிடிவி காட்சியில், அதிவேகத்தில் வந்த சொகுசு கார், சாலையோரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

KERALA

இதனால் அருகிலிருந்த சாலையோர மீன்கடையில் வேகமாக புகுந்து, கடையின் முன் வேலை செய்துகொண்டிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி அனில் கேமத் என்பவர் மீது ஏறியதால் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தொடர்ந்து அருகிலிருந்த மற்ற இருவர்களும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், வாகனத்தை ஓட்டி வந்தவர் வயநாடு பகுதியில் வசித்து வருபவர் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர் மீது விபத்து வழக்குப்பதிவு செய்த கோட்டயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.