முதலிரவு அறைக்குள் மயங்கி உயிரிழந்த மணமகன் : ஆசையாக சென்று கதறிய மனைவி... நெஞ்சில் நேர்ந்த மாற்றத்தால் பரிதாபம்..!

முதலிரவு அறைக்குள் மயங்கி உயிரிழந்த மணமகன் : ஆசையாக சென்று கதறிய மனைவி... நெஞ்சில் நேர்ந்த மாற்றத்தால் பரிதாபம்..!



Andra Pradesh Man Died Before First Night

முதலிரவில் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதனப்பள்ளி பகுதியைச் சார்ந்தவர் துளசி பிரசாத். இவருக்கும், ஶ்ரீஷா என்ற பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணத்திற்கு பின்னர் முதலிரவுக்காண ஏற்பாடுகள் நடந்தது.

மணப்பெண் அறைக்குள் சென்றபோது மணமகன் சுயநினைவின்றி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் உடனடியாக குடும்பத்தாரை அழைக்கவே, அவர்கள் பிரசாத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

அங்கு ஏற்கனவே மணமகன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த செய்தியை கேட்ட இரு குடும்பத்தாரும் பெரும் சோகத்திற்குள்ளாகிய நிலையில், ஏற்கனவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரசாத் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முதலிரவு என்பதால் மணமகன் ஏதேனும் மாதிரி உட்கொண்டாரா? என்ற மருத்துவ பரிசோதனையும் நடந்து வருகிறது.