கோவில் புளியோதரை பிரசாதத்தில் இறைச்சி எலும்புத்துண்டுகள்; பக்தர்கள் அதிர்ச்சி.!

கோவில் புளியோதரை பிரசாதத்தில் இறைச்சி எலும்புத்துண்டுகள்; பக்தர்கள் அதிர்ச்சி.!



andhra-pradesh-srisailam-temple-puliogare

 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் நகரில் பிரம்மராம்பா மல்லிகார்ஜுன ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த கே. வேணுகோபால் என்பவர் இன்று சாமி கும்பிட சென்றிருந்தார். 

சாமி தரிசனத்திற்கு பின்னர் கோவில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில், புளியோதரை பிரசாதமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அச்சமயம், வேணுகோபால் பிரசாதம் சாப்பிட்டபோது, வாயில் குச்சி போன்ற ஒன்று அகப்பட்டுள்ளது.

அதனை கையில் எடுத்துப்பார்த்தபோது இறைச்சியின் எலும்பு துண்டுகள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, சம்பவத்தை வீடியோ எடுத்தவர், கோவில் நிர்வாகத்திடமும் எழுத்துபூர்வமான புகார் வழங்கி வந்துள்ளார். தற்போது இதுகுறித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன.