மகளின் திருமணத்தில், ஏழை மக்களுக்காக அம்பானி செய்த செயல், குவியும் வாழ்த்துக்கள்.!

மகளின் திருமணத்தில், ஏழை மக்களுக்காக அம்பானி செய்த செயல், குவியும் வாழ்த்துக்கள்.!



ambani provide food for poor people

இந்தியாவின் மிக பெரிய  பணக்காரரான முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், தொழிலதிபரான ஆனந்த் பிரமல்க்கும், ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள உதயபூர் அரண்மனையில் டிசம்பர் 12 ம் தேதி மிகவும் பிரமாண்டமாக திருமணம்  நடைபெற உள்ளது.

இந்நிலையில் அம்பானி தமது மகள் இஷாவின் திருமணத்திற்காக உதயப்பூரில் 
  4 நாட்கள் ஏழைகளுக்கு அன்ன தானம் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி கடந்த இரண்டு நாட்களாக அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ஏராளமான மனநலம் பாதிக்கப்பட்டோர் உடல் ஊனமுற்றவர்கள் கலந்து கொண்டனர்.

ambani daughter

மூன்று நேரங்களில் நடக்கும் இந்த அன்னதான நிகழ்ச்சியில் நாள் ஒன்றுக்கு சுமார் 5,100 உணவு வழங்கப்படுகிறது.

மேலும், அம்பானி,அவரது மனைவி மற்றும் மகள் என குடும்பத்தார்கள் அனைவரும் தங்களது கைகளால் ஏழை மக்களுக்கு மகிழ்ச்சியாக உணவளித்தனர்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ஏழை மக்களின் பசியை ஆற்றிய அம்பானியின் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.