குழந்தையின் டயப்பரில் மறைத்துவைத்த 2 கிலோ தங்கம்! சிக்கிய இந்திய குடும்பம்!!

குழந்தையின் டயப்பரில் மறைத்துவைத்த 2 கிலோ தங்கம்! சிக்கிய இந்திய குடும்பம்!!



airport-customs-seized-2-kilo-gold-dust-from-an-indian

சிங்கப்பூரில் இருந்து மும்பைக்கு மறைத்து கொண்டுவரப்பட்ட 2 கிலோ தங்க தூள்கள்.

சிங்கப்பூரில் இருந்து மும்பைக்கு பயணித்த இந்தியக் குடும்பத்தை சேர்ந்த ஒருவரிடமிருந்து சுமார் 1.05 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு கிலோ எடையுள்ள 24 காரட் தங்கத் தூளை விமான நிலைய சுங்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

செப்டம்பர் 12ஆம் தேதி அன்று சிங்கப்பூரில் இருந்து மும்பைக்கு வந்திறங்கிய இந்திய குடும்பம் ஒன்று சட்டப்பூர்வமாக மறைத்து வைக்கப்பட்டு தங்கத்தை எடுத்துவந்துள்ளார்.

இவர்களை சோதனை செய்த மும்பை விமானநிலைய சுங்கத்துறையினர் இவர்களிடமிருந்து 2 கிலோ தங்க தூள்களை பறிமுதல் செய்தனர். இந்த தங்கத்தை தங்களது உள் ஆடைகளிலும், அவர்களது மூன்று வயது குழந்தையின் டயப்பரிலும் மறைத்து வைத்து எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.