லாக்டவுனை மீறி ஆண் நண்பருடன் சுற்றித் திரிந்த நடிகை பூணம் பாண்டே கைது!

லாக்டவுனை மீறி ஆண் நண்பருடன் சுற்றித் திரிந்த நடிகை பூணம் பாண்டே கைது!



Actress poonam pandey arrested

மும்பையில் ஊரடங்கு உத்தரவையும் மீறி ஆண் நண்பருடன் காரில் சுற்றித்திரிந்த பிரபல கவர்ச்சி நடிகை பூணம் பாண்டே மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை பூணம் பாண்டே. மாடலிங்காக இருந்த இவர் ஒருசில சினிமாக்களிலும் நடித்துள்ளார்.

poonam pandey

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி அநாவசியமாக வெளியில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பூணம் பாண்டே நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது ஆண் நண்பரான ஷாம் அகமதுடன் மும்பை மெரைன் ட்ரைவ் சாலையில் காரில் சென்றுள்ளார். எந்தவித காரணமும் இல்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த இருவரையும் மெரைன் ட்ரைவ் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது BMW காரினையும் பரிமுதல் செய்துள்ளனர்.

இவர்கள் மீது சட்டத்தை மதிக்காதது, ஊரடங்கினை மீறி நோய் பரப்பும் நோக்கத்துடன் சுற்றித்திரிந்தது, பொறுப்பில்லாமல் நடந்துகொண்டது என பல்வேறு பிரிவுகளில் இவர்கள் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.