போலீஸ் போல் நடித்து இளம் பெண் பாலியல் வன்புணர்வு.. காவல்துறை விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மை.!



a-young-woman-was-sexually-assaulted-by-a-man-pretendin

இந்திய தலைநகர் டெல்லியில் காவல்துறை அதிகாரி போல் நடித்து  இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்  இளைஞரை கைது செய்து இருக்கிறது  குற்றப்பிரிவு காவல் துறை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர்  தனது வீட்டிற்குள் செல்லும்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த ஒரு நபர் தன்னை டெல்லி காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி என அறிமுகப்படுத்தி இருக்கிறார். மேலும் அந்த இளம் பெண்ணும் அவரது காதலரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் அதனை அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் காட்டுவதாகவும் கூறி மிரட்டி இருக்கிறார். மேலும் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்வதாகவும் அந்த பெண்ணை மிரட்டி உள்ளார்.

Indiaஇதனைத் தொடர்ந்து அந்த குடியிருப்பு பகுதியின் மாடிக்கு அழைத்துச் சென்ற அவர்  அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக யாரிடம் ஆவது தெரிவித்தால் அந்த வீடியோவை வெளியிடுவதாகவும் விரட்டி இருக்கிறார். இதனால் முதலில் அச்சமடைந்த அந்த பெண் பிறகு ரோகினி மாவட்ட காவல்துறையிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

Indiaஅந்தப் பெண்ணின் புகாரை  விசாரித்த காவல்துறையினர்  இந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்  குறித்த நபரை கைது செய்தனர். காவல்துறையின் விசாரணையில் அவரது பெயர் ரவி சோலாங்கி என்று தெரிய வந்திருக்கிறது. போலியான காவல்துறை அடையாள அட்டை தயாரித்து அந்த பெண்ணை மிரட்டி வன்புணர்வு செய்ததும் காவல்துறை விசாரணையில் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர்  கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.