சாலையில் அமைதியாக சென்ற பெண்ணுக்கு எமனாக பாய்ந்த தண்ணீர்... பதைபதைப்பு சி.சி.டி.வி காட்சிகள் வைரல்.!



A video of underground water gushing on a road in Maharashtra has gone viral

தண்ணீர் பைப் லைனில் ஏற்பட்ட பிரச்சனையால் நிலத்தை பிளந்துகொண்டு தண்ணீர் பாய்ந்த சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யாவத்மால் மாவட்டம், மைண்டே சவுக் - ஹிந்தி உயர்நிலைப்பள்ளி சாலையில், நேற்று மாலை நேரத்தில் பெண்மணி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். 

அப்போது, சாலையோரம் நிலத்துக்கடியில் இருந்த தண்ணீர் பைப்லைன் சேதமடைந்து, நீர் பீறிட்டு வெளியேறி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வாகனத்தில் சென்ற பெண் மீது கற்கள் விழுந்தன. 

இதனால் அவர் லேசான காயம் அடையவே, அங்கிருந்த பொதுமக்கள் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகள் வெளியாகியுள்ளன.