பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம்!.. வெளியான அதிர்ச்சி தகவல்...!!



A sudden twist in the case of famous actor Sushant Singh Rajput's suicide

கடந்த 2020-ஆம் வருடம் ஜூன் மாதம் 14-ஆம் தேதி பிரபல நடிகர் சுஷாந்த் சிங் தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

பிரபல இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020-ஆம் வருடம் ஜூன் மாதம் 14-ஆம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் அவரது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுஷாந்த் சிங் மரணத்தில் போதைப்பொருள் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் பரவின. இதை தொடர்ந்து மும்பை காவல்துறையினரிடம் இருந்த விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. 
மேலும் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றன.

இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் குறித்து அவரது உடலை உடற்கூராய்வு செய்த ரூப்குமார் என்பவர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தற்கொலை இல்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ரூப்குமார் கூறுகையில், சுஷாந்த் சிங் இறந்த அன்று எங்களின் கூப்பர் ஹாஸ்பிடலுக்கு ஐந்து சடலங்கள் வந்திருந்தன, அதில் ஒன்று விஐபி சடலம் என்று கூறப்பட்டது. நாங்கள் அங்கே போய் பார்த்தபோது தான் அது சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சடலம் என்பது தெரிந்தது.

அவரது உடலில் கழுத்தில் இரண்டு முதல் மூன்று இடங்களில் காயங்கள் இருந்தன, உடற்கூராய்வு செய்வதை வீடியோ பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் உயர் அதிகாரிகள் ஃபோட்டோ மட்டும் எடுக்கச் சொன்னார்கள். சுஷாந்தின் உடலை பார்த்ததும், இது தற்கொலை அல்ல, கொலை என்று என்னுடைய சீனியர்களிடம் சொன்னேன். ஆனால், அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை என அவர் கூறியுள்ளார்.