அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
நெஞ்சை நடு நடுங்கச் செய்யும் கொடூர செயல்... பெண்ணின் மார்பகத்தை வெட்டி துடிக்க துடிக்க கொன்ற கொடூர வெறியன்..!
நெஞ்சை நடு நடுங்கச் செய்யும் கொடூர செயல்... பெண்ணின் மார்பகத்தை வெட்டி துடிக்க துடிக்க கொன்ற கொடூர வெறியன்..!
பீகார் மாநிலத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம். பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு சந்தையில் நீலம் தேதி என்ற பெண்ணை பொது இடத்தில் வைத்து அதே ஊரை சேர்ந்த ஷகீல் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நீலம் தேவியின் கை, காது மற்றும் மார்பகங்களை வெட்டி உள்ளனர். மேலும் அப்பெண்ணின் கால்களை வெட்ட முயன்ற போது அங்கிருந்தவர்கள் கூச்சலிடவே அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த நீலம் தேவியை அங்கிருந்தவர்கள் மீட்டு மாயாகஞ்சிலுள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி நீலம் தேவி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
இருப்பினும் உயிரிழக்கும் கடைசி நிமிடத்திலும் நீலம் தேவி தனது மரண வாக்குமூலத்தில் கொலையாளிகள் குறித்த தகவல்களை கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளியான ஷகிலை கைது செய்து கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.