ஒரு நாள், இரண்டு நாள் இல்ல இரண்டு மாதம்... தினமும் வீட்டிற்கு சோர்வாக வந்த சிறுமி... அதிர்ச்சி சம்பவம்...

ஒரு நாள், இரண்டு நாள் இல்ல இரண்டு மாதம்... தினமும் வீட்டிற்கு சோர்வாக வந்த சிறுமி... அதிர்ச்சி சம்பவம்...



5 years old girl sexually harassed in mathiya Pradesh

மத்திய பிரதேச மாநிலம் கத்வா மாவட்டத்தில் உள்ள மொகத்  பகுதியில் மதரசா என்ற பள்ளி இயங்கி வந்துள்ளது. இப்பள்ளியில் மவுல்வி அப்துல் சமத் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் ஐந்து வயது சிறுமி ஒருவர் தினமும் பள்ளி முடிந்து வீட்டிற்கு சோர்வாக வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி அந்த சிறுமிக்கு அடிக்கடி உடல்நல குறைவும் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒன்று, இரண்டு நாட்கள் அல்ல கிட்டத்தட்ட இரண்டு மாதமாக சிறுமி மிகவும் சோர்வுடன் காணப்பட்டு வந்துள்ளார்.

Mathiya pradesh

இதனை கவனித்து வந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து மகளிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி சில திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். அதாவது பள்ளியில் ஆசிரியராக பணிப்புரியும் மவுல்வி அப்துல் சமத் தனக்கு தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் அதனால் உடல்நல குறைவு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இதனை பெற்றோரிடம் சொல்ல மிகவும் அச்சம் ஏற்பட்டதால் சொல்லாமல் இருந்து வந்ததாக சிறுமி கூறியுள்ளார். இச்சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் சென்று புகார் அளித்துள்ளனர்.   போலீசார் விசாரணை நடத்தி அந்த ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.