மொபைலில் கார்டூன் பார்த்தபடி 5 வயது சிறுமி மாரடைப்பால் பலி; பெற்றோர் கண்முன் சோகம்.!

மொபைலில் கார்டூன் பார்த்தபடி 5 வயது சிறுமி மாரடைப்பால் பலி; பெற்றோர் கண்முன் சோகம்.!



5 years old girl baby died watching mobile

 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹசன்பூர், அம்ஹோரா பகுதியைச் சார்ந்தவர் மகேஷ் கன்வர்ஷி - சோனியா. இவர்களுக்கு ஐந்து வயதுடைய காமினி என்ற மகள் இருக்கிறார். 

இந்நிலையில் சம்பவத்தன்று சிறுமி தனது கைகளில் செல்போனை வைத்து உபயோகம் செய்து கொண்டிருந்தார். திடீரென செல்போனை கீழே போட்டு இருக்கிறார். 

UttarPradesh

சிறுமியை எழுப்பிய போது அவர் சுயநினைவின்றி மயங்கிவிடவே, அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

சிறுமியின் மரணத்தை உறுதி செய்த மருத்துவர்கள் சிறுமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.