சாதியை காரணம் காட்டி கசந்து போன 5 வருட காதல்... கொந்தளித்த காதலனின் கொடூர செயல்.. பரபரப்பு சம்பவம்..!



5-years-of-love-that-soured-on-the-basis-of-caste-the-c

கர்நாடகாவில் முருகேஷ்பால்யா பகுதியில் உள்ள தனியார் ஹெல்த்கேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த லீலா என்ற பெண்ணும் மற்றொரு தனியார் ஹெல்த்கேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தினகர் என்பவரும் கடந்த 5 ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தினகர் என்பவரை காதலிப்பதாக லீலா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் லீலாவின் பெற்றோர் தினகரனின் சாதியை காரணம் காட்டி அவர்களது திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததோடு லீலாவையும் காதலை விட்டுவிடும்படி கூறியுள்ளனர். இதனையடுத்து லீலா பெற்றோரின் வார்த்தைக்கு மறுப்பு தெரிவிக்காமல் தினகரனுடன் ஏற்பட்ட காதலை மறந்து விடுவதாக கூறியுள்ளார்.

5 years love

 இதனைத் தொடர்ந்து லீலா தினகரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் பணி முடிந்து வீடு திரும்பிய லீலாவை வழிமறித்த தினகர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். ஆனால் அதற்கு லீலா மறுக்கவே ஆத்திரமடைந்தத தினகர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக லீலாவை குத்தியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் லீலாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு லீலாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தினகரை தேடி வருகின்றனர்.