#வீடியோ: அக்காவுக்கு குட் பை சொல்லி, நிமிடத்தில் துள்ளத்துடிக்க உயிரிழந்த 4 வயது குழந்தை: மாடி வீடுகளில் இருப்போரே உஷார்.!

#வீடியோ: அக்காவுக்கு குட் பை சொல்லி, நிமிடத்தில் துள்ளத்துடிக்க உயிரிழந்த 4 வயது குழந்தை: மாடி வீடுகளில் இருப்போரே உஷார்.!



4-year-old-falls-to-death-from-second-floor-in-faridaba

 

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர் பால்கனியில் தங்களின் குழந்தைகளை ஓரத்தில் நிற்கவைப்பது அல்லது அவர்களை கவனிக்காமல் பால்கனியில் இருக்கிறார்கள் என அலட்சியமாக இருப்பது என்ன மாதிரியான விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் நகரில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வீட்டின் இரண்டாவது தலத்தில் இருந்து, கீழே நடந்து வந்த தனது அக்காவுக்கு Bye சொல்வதற்காக கைகளை அசைத்த குழந்தை எதிர்பாராத விதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தது. 

பால்கனியில் இருந்தவாறு அக்காவை கவனித்த சிறுமி, ஓரத்தில் எட்டிப்பார்த்தவாறு கைகளை அசைத்து கீழே விழுந்தது. 4 வயது பிஞ்சு கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் பரிதாபமாக உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.