கருகிய இளம் உயிர்... 4 வயது சிறுவனுக்கு எமனான செட்டாப் பாக்ஸ்.!

கருகிய இளம் உயிர்... 4 வயது சிறுவனுக்கு எமனான செட்டாப் பாக்ஸ்.!



4-year-old-boy-died-due-to-electric-shock-while-touchin

மகாராஷ்டிரா மாநிலத்தில் செட்டாப்  பாக்ஸை இழுத்த குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை 4 வயது சிறுவன் தனது வீட்டில் டிவியில் கார்ட்டூன் பார்த்து இருந்திருக்கிறான். அப்போது அவனது தந்தை உறங்கி விட்டார்.

I NDIAஅப்போது சிறுவன் டிவிக்கு அருகில் இருந்த செட்டாப் பாக்ஸ் இழுக்க முயன்றுள்ளான். இதனால் மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறான். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

I NDIAமேலும் இந்த விபத்து தொடர்பாக  விசாரணை நடத்தி வருகின்றனர். கார்ட்டூன் பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்த குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.