3வது மனைவியை வீட்டு சிறையில் வைத்த கணவன்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

3வது மனைவியை வீட்டு சிறையில் வைத்த கணவன்.. வெளியான அதிர்ச்சி தகவல்!



3rd wife house arrest in Karnataka

மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட மனைவியை கணவன் வீட்டு சிறையில் வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகின்றன. அதற்கு காரணம் கணவன்-மனைவி இடையே புரிதல் இல்லை என கூறப்பட்டாலும், சில விவகாரமான மற்றும் வித்தியாசமான விவாகரத்து வழக்குகளும் அரங்கேறி வருகிறது.

karnataka

இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் மைசூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனாலயா. இவருக்கு ஏற்கனவே 2 திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். என்ன தம்பதியினருக்கு தற்போது ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் இவர் கடந்த 12 ஆண்டுகளாகவும் வீட்டு சிறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 2 மனைவிகள் விவாகரத்து வாங்கியதால், இவரும் விவாகரத்து கேட்டு விடு உறவு என்ற அச்சத்தில் மனைவியை வீட்டில் சிறையில் வைத்து வந்தது தெரிய வந்துள்ளது.

karnataka

கழிவறை கூட இல்லாமல் அந்த பெண் வாலியிலேயே இயற்கை உபாதைகளை கழித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடுமைகளை தாங்காமல் மனைவியை கொடுத்த புகாரின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.