இரவு ஆனா அவர் என்ன செய்வார் தெரியுமா..? தொழிலாளியை கொலை செய்த 3 திருநங்கைகள்..! பகீர் கிளப்பிய வாக்குமூலம்.!

இரவு ஆனா அவர் என்ன செய்வார் தெரியுமா..? தொழிலாளியை கொலை செய்த 3 திருநங்கைகள்..! பகீர் கிளப்பிய வாக்குமூலம்.!



3-transgenders-killed-a-man-over-work-competition

கார்மென்ட் ஒன்றில் வேலைபார்த்துவந்த நபர் ஒருவரை திருநங்கைகள் மூன்று பேர் சேர்ந்து அடித்தே கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ராமநகர் டவுனை சேர்ந்தவர் ராஜேந்திரா. இவர் பெங்களூருவில் உள்ள எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் அமைந்துள்ள கார்மென்ட் ஒன்றில் வேலை பார்த்துவந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜேந்திரா மயங்கிய நிலையில் அவரை மூன்று திருநங்கைகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றுள்ளனர்.

அங்கு ராஜேந்திராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூற, மூன்று திருநங்கைகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை பார்த்த மருத்துவர்கள் ராஜேந்திரா குறித்து கேள்வி எழுப்ப, மூன்று திருநங்கைகளும் மாறி மாறி உளறியுள்ளனர். இதனால் மருத்துவர்களுக்கு சந்தேகம் வந்தநிலையில் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூன்று திருநங்கைகளையும் விசாரித்ததில் பல்வேறு திடுக்குகிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம், ராஜேந்திரா பகல் நேரத்தில் கார்மெண்டில் வேலை பார்த்தாலும், இரவு நேரத்தில் திருநங்கை போல உடை அணிந்துகொண்டு, அவர்களைப்போல் தனது பாவனைகளை மாற்றிக்கொண்டு சாலையில் வந்து நின்று அந்த வழியாக வருபவர்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளார்.

இதனால் இந்த மூன்று திருநங்கைகளின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இதுகுறித்து ராஜேந்திராவிடம் கேள்வி எழுப்பி சண்டை போட்டுள்ளனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாற, மூன்று திருநங்கைகளும் சேர்ந்து ராஜேந்திராவை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் நிலைகுலைந்து  கீழே விழுந்த ராஜேந்திரா உயிரிழந்ததாக திருநங்கைகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் மூன்று பேரையும் கைது செய்துள்ள போலீசார் சிறையில்  அடைத்து அவர்களிடம் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.