ஒரே நேரத்தில் ஆக்ரோஷமாக நின்ற மூன்று ராஜநாகம்!! இதுவரை கண்டிராத அரிய காட்சி! வைரல் வீடியோ..

ஒரே நேரத்தில் ஆக்ரோஷமாக நின்ற மூன்று ராஜநாகம்!! இதுவரை கண்டிராத அரிய காட்சி! வைரல் வீடியோ..



3-raaja-naagam

பாம்பு என்றால் படையும் அஞ்சும் என்பர். எவ்வளவு பெரிய வீராதி வீரர்களாக இருந்தாலும் சிறு பாம்பை கண்டால் சிறு நடுக்கம் ஏற்பட தான் செய்கிறது. இது ஒருபுறமிருந்தாலும் வினோதமான சில மக்கள் விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளை வளர்ப்பது, அதனைப் பிடித்து விளையாடுவது போன்ற வித்தியாசமான செயல்களால் பார்ப்போரை ஆச்சரியப்பட வைக்கின்றனர்.

மேலும் பாம்புகள் குறித்த வீடியோக்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது மூன்று பாம்புகள் ஒன்று சேர்ந்து ஒரே  நேரத்தில் படம் எடுத்து நிற்கும் காட்சி ஒன்று இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

இந்த குறிப்பிட்ட வீடியோவில், king cobra என்று அழைக்கப்படும் நாகபாம்பு மூன்று முக்கோண நிலையில் நின்றுகொண்டு ஒரே நேரத்தில் படம் எடுக்கும் காட்சி  தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது. இதில் ஒரே ஒரு பாம்பு மட்டும் தனது நாக்கினை வெளியே நீட்டிக்கொண்டு படம் எடுக்கிறது . இந்த  காட்சி பார்ப்போர் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதோ அந்த காட்சி...