டேய் நம்பி தானே டா வந்தேன்... ஏன் என்னைய இப்படி பண்ண!! வயதான பெற்றோரை கவனிக்க சென்ற இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம்...

டேய் நம்பி தானே டா வந்தேன்... ஏன் என்னைய இப்படி பண்ண!! வயதான பெற்றோரை கவனிக்க சென்ற இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த கொடூரம்...



21-years-old-girl-raped-by-45-years-old-man-in-bangalor

பெங்களூரு கூட்லு பகுதியை சேர்ந்தவர் பரசிவமூர்த்தி(45). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வசித்து தனது வயதான தாய், தந்தையை கவனித்து கொள்ள வில்சன் கார்டனில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்திடம் வேலைக்கு ஆள் கிடைக்குமா என்று கேட்டு இருந்திருக்கிறார் பரசிவமூர்த்தி .

அந்நிறுவனம் 21 வயது இளம்பெண் ஒருவரை வேலைக்கு அனுப்பியுள்ளது. அந்த இளம் பெண்ணும் வயதானவர்களை நல்ல முறையில் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் தனிமையில் இருந்த அந்த 21 வயது இளம்பெண்ணிடம் பரசிவமூர்த்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதை குறித்து யாரிடமும் கூற கூடாது என முரட்டியுள்ளார்.

bangalore

இதனால் சில காலம் அமைதியாக இருந்த இளம்பெண் இச்சம்பவம் குறித்து தன்னை வேலைக்கு அனுப்பிய நிறுவனத்தினரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை சொல்லி அழுது இருக்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நிறுவனத்தினர் உடனே இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் பரசிவமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.